search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்டா பாசனம்"

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
    • அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 1827 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 2128 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 67.21 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 67.39 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 30.50 டி.எம்.சி.யாக உள்ளது.

    • அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் 2 மாதம் ஆகிறது.

    டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு தண்ணீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    நீர்வரத்தை விட தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.எனவே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும்.

    • காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார்.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 17-வது நாளாக இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 126 கனஅடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 12-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், அன்று இரவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    நேற்று மதியம் வரை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது, காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நேற்று மதியம் முதல், அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    தண்ணீர் வரத்தை காட்டிலும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 94.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 93.32 அடியாக சரிந்து உள்ளது.

    • மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது.
    • மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    திருச்சி:

    காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார்.

    முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க் கால்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்த படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்புக்கு திறந்துவிடப்பட்டது.

    அங்குள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது. மாலையில் பெட்டவாய்த்தலைக்கு வந்து அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக் கொம்புக்கு நேற்று இரவு சரியாக 8.30 மணியளவில் வந்தடைந்தது.

    அதன்பிறகு முக்கொம்பில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களை தூவினர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு விநாடிக்கு 1,900 கனஅடி நீர் மட்டுமே வந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கனஅடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக நமக்கு வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மதியம் சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.

    கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும். மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 727 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    • மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16-ந் தேதி கல்லணைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். தண்ணீர் வரத்து மற்றும் அணையின் நீர் இருப்பை பொறுத்து 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 331 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதை தொடர்ந்து ஜூன் மாதம் 12-ந் தேதியான இன்று தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

    இதற்காக மேட்டூர் அணையின் வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அணை திறக்கப்பட்டதும் அணையிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரை பூக்கள் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்களும், பொதுமக்களும், அதிகாரிகளும் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் பூக்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    முதலில் 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதையொட்டி காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கும் பயன் அளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம், 7 கதவணை மின் நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் தொடங்கியுள்ளது.

    இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் 4,773.13 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.90 கோடியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக 1934-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன் மாதம் 12-ந் தேதி இதுவரை 18 முறை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 12-ந் தேதிக்கு முன்பாக 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 19-வது முறையாக ஜூன் மாதம் 12-ந் தேதி இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 727 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து 867 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 103.35 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு இன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16-ந் தேதி கல்லணைக்கு சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலமைச்சர் மேட்டூர் வருகையை ஒட்டி அணையின் வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் குழுவினர் அணையில் முழுமையாக சோதனை நடத்தினர். முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் அணைக்கு நேரில் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அணை பகுதி மட்டுமில்லாமல் நகர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டிருந்தது.

    • காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.
    • கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.

    காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக திகழ்வது மேட்டூர் அணை. கர்நாடக மாநில குடகு பகுதியில் தொடங்கும் காவிரி ஆறு தமிழக மக்களின் தாகத்தை தீர்த்து, உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையப்பெற்றது மேட்டூர் அணை.

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தி தமிழக மக்களின் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள மக்களின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும் ஒரு அணை யாக அமைந்து ள்ளது.

    வழக்க மாக காவேரி டெல்டா பாசன பகுதிக்கு ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் முன் எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் 24 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முழு மூச்சாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பருவ மழை தொடங்குவதற்குள் குறுவை அறுவடை செய்வதற்கு ஏதுவாக பணிகளை முடுக்கிவிட்டு செய்து கொண்டுள்ளனர்.இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு கடந்த சில நாட்களாக வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 109 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.

    மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டால் திறக்கப்படும் தண்ணீர் அப்படியே கொள்ளிடத்தில் திருப்பி விடக் கூடிய வாய்ப்பு உள்ளது. கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க கூடும்.மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களை பயன்பெறும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால, மற்றும் உயர் கொண்டான் நீட்டிப்பு, புள்ளம்பாடி கா ல்வா ய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு அதனோடு இணைந்த ஏரிகளை நிரப்ப நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் பருவநிலை சீராக இருக்கும் நிலையில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டா–ன்நீட்டிப்பு வாய்களில் தண்ணீர் திறந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீராக செயல்பட்டால் இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி தண்ணீரை சேமிக்க வழி ஏற்படும்.எனவே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையினர் விரைவாக செயல்பட்டு மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்படும் தண்ணீரை வீணாக்காமல் ஏரிகளை நிரப்ப ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×